பாஜக தலைவர் எஸ்.வி.சேகரை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது..!! சர்ச்சையை கிளப்பிய தமிழிசை..!!


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடிகர் எஸ்.வி.சேகர் வழிபாடு செய்தார். வழிபாடு முடித்து வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர் பா.ஜ.க.வின் தமிழக மேலிடம் என்னை சரியாக பயனப்டுத்திக்கொள்ளவில்லை என்றார். மேலும், தமிழக பாஜக பொறுப்பை தம்மிடம் கொடுத்தால் தற்போது இருக்கும் வாக்கு வங்கியை விட அதிக வாக்கு வங்கியை உண்டாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி பாஜக தலைமையை நீங்கள் ஏற்கவில்லை என்பதால் தான் செயற்குழுவுக்கு உங்களை அழைக்கவில்லையா? என்பதாகும், பின்னர் சுதாரித்த அவர் அழைத்தால் தானே போக முடியும்.அதற்காக தினமும் தமிழிசை வீட்டு முன் நின்று அக்கா நான் வந்துட்டேன்னு சொல்லணுமா?அவர் என்னைவிட வயதில் சிறியவர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் வாய்ப்பு கொடுத்தால், சிறப்பாக பணியாற்றுவேன் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்தது குறித்து தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை தெரிவிக்கையில், ”இதற்கு பதில் கூறுவதை விட., சிரிக்க தான் முடியும், வேறு என்ன பதில் கூறுவது, எஸ்.வி.சேகர் நிறைய சிரிப்பு வரும் நாடகங்களில் நடித்து., நடித்து., நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசியிருப்பார். (சிரித்துக்கொண்டே) தமிழக பாஜக தலைவர் பதவி என்பது அவ்வளவு இலகுவானது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.source-polimernews

* இந்த பதிஉங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!