சபரிமலை ஐயப்பனுக்கு ஏன் 48 நாட்கள் விரதம் இருக்கிறார்கள் தெரியுமா..?


சபரிமலை செல்வதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தாக வேண்டும் என்பது சாஸ்திரம், ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் இது எப்படி வந்தது? மொத்த நட்சத்திரங்கள் 27. அவற்றுக்குரிய ராசிகள் 12, கிரகங்களின் எண்ணிக்கை 9, இவை மொத்தம் 48. இந்த 48 தினங்களுக்கு ஒருவர் பகவானிடம் பக்தி வைத்து தரிசித்தால், எந்தவித கலிதோஷங்களும் பிடிக்காது.


நட்சத்திரங்கள், ராசிகள், கிரகங்களால் உண்டாகும் தொல்லைகளில் இருந்து விடுபட்டு, பகவானுடைய பாதங்களில் சரணாகதி அடைந்து உலகத் துன்பங்களிலிருந்து மீண்டு வருவதற்காகவே பக்தர்கள் ஒரு மண்டலமான 48 நாட்கள் காலம்விரதம் மேற்கொள்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!