உண்மைக் காதலுக்காக கதறும் லலித் காந்தி! நிராகரிக்கும் நிலானி!! அதிர்ச்சி ஆடியோ லீக்!!!
`நீ என்னை நிம்மதியாக வாழ விடமாட்டாயா?’ என்று நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தி லலித்குமாருடன் கண்ணீர்மல்கப் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
நடிகை நிலானியும் உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரும் கடந்த 10 நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் போனில் பேசியுள்ளனர். அந்த போன் உரையாடலை நமக்கு அனுப்பினார் நடிகை நிலானி. அதில், நடிகை நிலானியிடம் காந்தி லலித்குமார் ஜன்னல் கதவைத் திறக்கும்படி கூறுகிறார். அதற்கு நிலானி மறுப்பு தெரிவிக்கிறார். அதுதொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட விவாதம் நடக்கிறது. ஆனால், கடைசி வரை நிலானி ஜன்னலைத் திறக்கவில்லை. தொடர்ந்து, காந்தி லலித்குமார் வீட்டின் ஹாலிங் பெல்லை அழுத்துகிறார். அதற்கு நிலானி, நீ அழுத்தும் ஹாலிங் பெல்லின் சத்தத்துக்கு ஏற்ப என் கையைக் கத்தியால் அறுத்துக்கொள்வேன் என்று கூறுகிறார். அதன்படி மூன்று முறை கையை அறுத்துக்கொள்கிறார். (அந்தப் புகைப்படத்தையும் நமக்கு அனுப்பியுள்ளார்). அதன்பிறகு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நிலானி தகவல் கொடுக்கிறார். அதன்பிறகே காந்தி லலித்குமார் வீட்டை வீட்டுப் புறப்பட்டுச் சென்றதாக நடிகை நிலானி நம்மிடம் தெரிவித்தார்.
Nilani Lalitkumar Gandhi Phone Call conversation
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.