குஜராத் மாநிலத்தில் காணாமல் போன காதல் ஜோடி சடலமாக மீட்பு..!! பரபரப்பு தகவல்..!!


குஜராத் மாநிலத்தில் 4 நாட்களாக காணாமல் போன காதல் ஜோடியினர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாம்நகர் மாவட்டம் Meghpar கிராமத்தை சேர்ந்த சுமித்ரா (25) என்ற இளம்பெண் கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாகவே கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இவர் தன்னுடைய குடும்பத்துடன் 2 வருடங்களுக்கு முன்பாக Bhensdal கிராமத்திற்கு சென்றபோது அங்கு Hasmukh Vajelia (20) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியதை அறிந்த குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Hasmukh தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்தவர் என்பதால், சுமித்ராவின் குடும்பத்தினர் வெறுத்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென கடந்த 4 நாட்களாக இருவரும் மாயமாகியுள்ளனர். இதனை தொடர்ந்து சுமித்ராவின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.

அதனடிப்படையில் பொலிஸாரும் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை Bhensdal கிராமத்திற்கு வெளியே சடலமாக கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள் இறந்து கிடந்த இடத்தில் பாட்டில் ஒன்று கண்டெடுக்கப்பட்டதால், தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் பொலிஸார் தரப்பில், தற்கொலைக்கான எந்த வித தடயங்களும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.source-nadunadapu

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.