உங்க வீட்ல இந்த 6 விஷயங்கள் செய்யுங்க… அப்புறம் பாருங்க…!


சில பொருட்கள் நேர்மறை சக்திகள் கொண்டவையாக இருக்கும். சில பொருட்கள் எதிர்மறை சக்தியைக் கொண்டிருக்கும். அதனால் நாம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களின் தன்மைகளை உணர்ந்து அதற்கேற்றாற்போல சில விஷயங்களைப் பின்பற்றினால் வீட்டில் கஷ்டம் என்ற வார்த்தையே இருக்காது.


வீட்டில் எந்த இடத்தில் எல்லோரும் அதிகம் நேரம் செலவிடுகிறோமோ அந்த இடத்தில் வெள்ளி அல்லது பித்தளை பட்டயத்தில் செய்த பிரமீடுகளை வைத்திருக்க வேண்டும். அது வீட்டில் உள்ளவர்களின் ஆயுளை உறுதிப்படுத்தும்.


வீட்டில் பணம், பொருள், ஆரோக்கியக் குறைபாடு ஏதேனும் இருக்கிறதென்று நீங்கள் நினைத்தால், இது உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பதை உணர்ந்து கொண்டு அதை நிவர் வீட்டின் வடக்கு திசையில் தண்ணீர் குடம் வைத்திருக்க வேண்டும்.


குடம் இல்லையென்றால் களிமண்ணால் செய்த பானையை வைத்து தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். தண்ணீர் குடம் காலியாக இருக்கக் கூடாது. தண்ணீர் குறையக் குறைய நீர் நிரப்பி வைக்க வேண்டும். மீன் தொட்டி வீட்டில் வைத்து மீன் வளர்த்தால் செல்வம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அதனால் மீன் தொட்டி வாங்கி, வளர்க்கலாம்.

வீட்டின் தென்மேற்கு திசையில் அனுமானின் பஞ்ச ஸ்வரூபம் புகைப்படம் வைத்திருப்பதும் அவ்வப்போது அனுமானுக்கு பூஜை செய்வதும் நல்லது. அது வீட்டில் செல்வத்தை அதிகரிக்கச் செய்யும். லட்சும், குபேரன் அல்லது ஸ்வஸ்த்திக் சின்னம் ஆகியவற்றை வீட்டின் மெயின் கேட்டுக்கு நேரே வைத்திருக்க வேண்டும். இது வீட்டின் செல்வ வளத்தை அதிகரிக்கச் செய்யும்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!