புழல் சிறையில் அபிராமிக்கு டார்ச்சரா? கொதிக்கும் ஆதரவு நெட்டிசன்கள்..!


சென்னை குன்றத்தூரை சேர்ந்த வங்கி பணியாளரான விஜய் என்பவரின் மனைவி அபிராமி. பிரியாணி கடை வைத்திருக்கும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் தனது இரு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் வைத்து கொலை செய்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அபிராமி மற்றும் அவரது காதலன் சுந்தரம் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை புழலில் உள்ள மகளிர் சிறையில் அபிராமி 3 பெண்கள் தங்கக்கூடிய அறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் நாளிலிருந்தே அழுது கொண்டே இருந்த அபிராமியை சக பெண் கைதிகள் எதற்காக நீ ஜெயிலுக்கு வந்த? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்துள்ளனர். ஆனால் அபிராமியோ எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார்.

இதனையடுத்து ஜெயிலில் இருக்கும் பெண் காவலாளிகளின் மூலமாகவும், செய்திகளின் மூலமாகவும் அபிராமி பற்றி தெரிந்து கொண்ட பெண் கைதிகள், குழந்தைகளை ஏன் கொலை பண்ண? என்று கேட்டு நச்சரித்து வருகின்றனர். இதனால் மனமுடைந்துள்ள அபிராமி தொடர்ந்து அழுது வருவதாகவும், தன்னை வேறு அறைக்கு மாற்றி விடுங்கள் என்று கூறுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அபிராமிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் என்று இணையதளத்தில் அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!