கள்ளக்காதல் ஜோடி உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை – ஈரோட்டில் பரபரப்பு..!


உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. தங்களது கள்ளக்காதலுக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்தனர்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஆனந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (38). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள். அந்தியூர் அருகே உள்ள அத்தாணிக்கு சுரேஷ் கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம்.

அப்போது அவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மனைவி ஜோதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இதுபற்றி மாரியம்மாளுக்கு தெரியவந்ததும் சுரேசை கண்டித்து உள்ளார். ஆனால் கள்ளக்காதல் தொடர்பை சுரேஷ் கைவிடவில்லை. மேலும் குடித்துவிட்டு வந்து குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். இதனால் சுரேசிடம் கோபித்துக்கொண்டு மாரியம்மாள் தனது அண்ணன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதற்கிடையே ஜோதியின் கள்ளக்காதல் விவகாரம் அவருடைய கணவர் சின்னச்சாமிக்கும் தெரியவந்தது. அவர் ஜோதியை கண்டித்தார். இதன்காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தனது கணவரின் எதிர்ப்பு பற்றி ஜோதி, தனது கள்ளக்காதலன் சுரேசிடம் கூறி னார். தனது வீட்டிலும் நமது காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது என்று அவரிடம் சுரேஷ் கூறியதாக தெரிகிறது.

இதனால் இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு கள்ளக்காதல் ஜோடியினர் வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வீட்டைவிட்டு ஜோதி வெளியேறினார். பின்னர் அவரும், சுரேசும் ஒன்று சேர்ந்து அத்தாணி அருகே உள்ள வரதன் தோட்டம் என்ற பகுதிக்கு சென்றனர்.

அங்குள்ள மின் கம்பத்தில் கொக்கி மூலம் மின்சாரத்தை எடுத்து 2 பேரும் தங்களுடைய உடலில் பாய்ச்சினர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் உடல் கருகி இறந்தனர்.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!