நீங்க தப்பா பேசுறீங்க… சென்ட்ராயனிடம் சீறிய மும்தாஜ்…!


பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை தாண்டியுள்ளது. இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக மாறி வருகிறது.

இந்த வார எலிமினேசனில் ஐஸ்வர்யா, ஜனனி, மும்தாஜ், சென்ட்ராயன், விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர். இதில் எலிமினேசனில் உள்ள போட்டியாளர், தன்னை காப்பாற்றிக் கொள்ள விரும்பினால், அவருக்காக மற்றொருவரை கடினமான வேலைகளை செய்ய வைக்க வேண்டும்.

குறிப்பாக ஜனனியை காப்பாற்ற பாலாஜி மொட்டை அடிக்க வேண்டி இருந்தது. மொட்டை அடித்தார். யாஷிகா தன்னை காப்பாற்றிக் கொள்ள, கிருத்திகாவிடம் புருவத்தை பிளிச்சிங் செய்ய சொன்னார்.

இந்நிலையில் இன்றைய ப்ரோமோக்கள் வந்துள்ளன. அதில் மும்தாஜிடம், கிருத்திகா கூறுகையில், நீங்கள் உங்கள் தலைமுடியை எலக்ட்ரிக் கிரீனாக மாற்றி கலரிங் செய்ய வேண்டும் என்கிறார். அதற்கு முடியாது என்று மறுத்த மும்தாஜ், நான் வெளியில் ஒரு சுயநலவாதியாக தெரிந்தாலும், எனக்கு தெரியும் என்னால் முடியாது என்று கூறினார்.

அதற்கு கிருத்திகா பதில் பேசுகையில், நீங்கள் ரெம்ப நாள் கிரீன் கலராக வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்கிறார். ஆனால் மும்தாஜ் மறுக்கிறார். மீண்டும் கிருத்திகா, எனக்காக நீங்கள் பண்ணுவீங்கண்ணு நினைக்கிறேன் என்கிறார். ஆனால் மும்தாஜ், என் அம்மாவுக்காக கூட பண்ண மாட்டேன் என்று திட்டவட்டமாக மறுக்கிறார்.

மற்றொரு ப்ரோமோவில், மும்தாஜினிடம் நீங்கள் நிறைய இடத்தில் மற்றவர்களுக்காக யோசிக்கிறவங்க என்று மும்தாஜிடம் பேசுகிறார். இதேபோல் யாஷிகா, ஜனனி, பாலாஜி என ஒவ்வொருவும் ஒரு சில வார்த்தைகள் பேசுகிறார்கள்.

3வதாக வந்த ப்ரேமோவில், சென்ட்ராயன் பேசுகிறார், அதில் மேடமா பொறுத்தவரைக்கும் சென்ட்ராயனுக்கு ஒன்னுமே தெரியாது என்று சொன்னங்கா, ஆனால் நானும் கத்துக்கிறேன் என்று மும்தாஜை பார்த்து கூறுகிறார். இதனை கேட்டு கோபமடைந்த மும்தாஜ், நீங்க தப்பா பேசுறீங்க, என்று கோபப்படுகிறார்.

அதன் பின்னர் மும்தாஜ் சென்ட்ராயனிடம், நீங்க தப்பா பேசுறீங்க நான் கோபித்துக் கொள்ள கூடாதா என்று கேட்கிறார். அதற்கு சென்ட்ராயன் மன்னிச்சுடுங்க என்கிறார். அதைத்தொடர்ந்து மஹத் பேசுன மாதிரி நீங்களும் பேசிக்கிட்டுஇருங்க, நான் கேட்டுட்டு இருக்கேன்… என்று மும்தாஜ் சொல்கிறார்.

அதற்கு கோபமான சென்ட்ராயன் எதுக்கு, அந்த ஒரு வார்த்தை சொன்ன நாலதான், வெளியிட போய்டான், நானும் வெளிய போகுனனுமா? என்று கேள்வி எழுப்புகிறார்.

இந்த ப்ரோமோக்களை பார்க்கும் போது, இன்றைய டாஸ்க்கு மொத்தமும் மும்தாஜ்க்கு தான் வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது. எனவே இன்று விறுவிறுப்பாக இருக்கும் என தெரிகிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!