பார்லர் போகாமலே வீட்டிலேயே ஸ்கிரப் செய்யலாம்…. இந்த 2 பொருள் மட்டுமே போதும்..!


முகத்தை அழகாக வைத்திருக்கும் நோக்கில், பல பெண்கள் பல்வேறு விதமான ஸ்கிரப்களை முகத்துக்கு பூசுவதுண்டு. அத்துடன் அதனால் வரும் பக்கவிளைவுகளுக்கும் முகங் கொடுப்பதுண்டு.

கடைகளில் விற்கப்படும் ஸ்கிரப்களில் இரசாயனப் பொருட்களும் கலந்திருக்கும். அதனால் அது தற்காலிக அழகைத் தந்தாலும் காலப் போக்கில் பக்கவிளைவுகளைக் கொண்டு வரும்.

கடைகளில் விற்கப்படும் ஸ்கிரப்களை வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிமையான முறையில் ஸ்கிரப் செய்யலாம். அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
01. அரைக் கோப்பை தேங்காய் எண்ணெய்
02. அரைக் கோப்பை பேக்கிங் சோடா

செய்முறை
தேங்காய் எண்ணெயை சூடாக்கிக் கொள்ளவும். பின்னர் அந்த எண்ணெயில் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் பூசி சில நிமிடங்கள் முகத்தில் வைத்திருந்து பின்னர் கழுவி விட வேண்டும். இந்தக் கலவையை வாரம் ஒன்றிற்கு 3 தடவைகள் பூசி ஸ்கிரப் செய்ய வேண்டும். இதன் மூலம் முகம் வசிகரமாகவும் அழகாகவும் இருக்கும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!