கணவர் பாசமாக பேசாததால் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு…!


கணவர் பாசமாக பேசாததால் விரக்தி அடைந்த மனைவி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு தங்கவேல் நகரைச் சேர்ந்தவர் வெங்கட நாராயணன். ரியல் ஈஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பவானி(வயது 28). இவர்களுக்கு வினய்வெங்கட்குமார்(7) அரிகேசவன்(5) என 2 மகன்கள் உள்ளனர். வெங்கடநாராயணன் காலை வீட்டில் இருந்து சென்றால் இரவில் தாமதமாகத்தான் வீட்டுக்கு வருவார்.

அவர் மனைவி பவானியிடம் பாசமாக பேசுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் பவானி விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வெங்கடநாராயணன் கிரிக்கெட் விளையாட சென்றார். மகன்கள் மாடியில் விளையாட சென்றனர். அப்போது வீட்டில் இருந்த பவானி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற மாதவரம் போலீசார் பவானி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!