செக்ஸ் புகாரால் சீன தொழிலதிபருக்கு அமெரிக்காவில் நேர்ந்த விபரீதம்..!


அமெரிக்கா சென்ற சீன தொழிலதிபர் செக்ஸ் புகாரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

சீனாவை சேர்ந்தவர் லியு குயாங்டாங் (45). பிரபல தொழில் அதிபர். கோடீசுவரரான இவர் ரிச்சர்ட் லியு என்றும் அழைக்கப்படுகிறார். வியாபார வி‌ஷயமாக இவர் அமெரிக்கா சென்று இருந்தார். அங்கு மின்ன பொலிஸ் நகரில் தங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். மறுநாள் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இவர் மீது ‘செக்ஸ்’ புகார் கூறப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறும் பட்சத்தில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறினர்.

தொழில் அதிபர் லியு சீனாவில் ஆன்லைன் வர்த்தகராக இருக்கிறார். ஜே.டி.காம் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். அதன் தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார்.

அமெரிக்காவில் இவர் கைது செய்யப்பட்டதை கே.டி.காம் நிறுவனம் உறுதி செய்துள்ள்து. வியாபார வி‌ஷயமாக அமெரிக்கா சென்ற அவர்மீது பொய் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. எனவே அமெரிக்க போலீஸ் விடுவித்தது என அந்த நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!