ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு..!


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு மும்பையில் இன்று நடைபெற்றது.

எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்து அறிவித்தது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ராயுடு, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், எம்.எஸ் தோனி, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஒய் சகால், அக்‌ஷய் படேல், புவனேஷ் குகார், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், கலீல் அகமது.

முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஆசியகோப்பை தொடரில் எதிர்பார்த்தது போலவே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடுவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. -Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!