ஓபன் டென்னிஸ் 2-வது சுற்றில் ஆண்டி முர்ரே படு தோல்வி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பிரிட்டிஷ் வீரர் ஆண்டி முர்ரேவும், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெர்னாண்டோ வெர்டஸ்கோவும் மோதினர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆண்டி முர்ரேவுக்கு கடும் சவாலாக விளங்கினார் வெர்டஸ்கோ. இதனால் முதல் செட்டை 7 -5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆண்டி முர்ரே இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

ஆனால் அதற்கு அடுத்த இரு செட்களையும் வெர்டஸ்கோ அபாரமாக ஆடினார். இதனா;, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்றார்.

இறுதியில், வெர்ட்ஸ்கோ ஆண்டி முர்ரேவை 7-5, 2-6, 6-4. 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். முன்னணி வீரரான ஆண்டி முர்ரே இரண்டாவது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.source-maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.