விருதுநகரில் அதிர்ச்சி.. ஆதரவற்றோர் இல்ல சிறுவர்கள் மாயம்..!! நடந்தது என்ன..?


விருதுநகரில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் அங்கிருந்தபடியே பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மாரீசுவரன் (வயது 10), ரமேஷ் (11), சேதுராமன் (12) ஆகியோரும் இந்த இல்லத்தில் தங்கி உள்ளனர். நேற்று இரவு 3 சிறுவர்களும் இல்லத்தில் உணவருந்தினர்.

அதன் பிறகு 3 பேரும் மாயமாகி விட்டனர். அவர்களை இல்லம் முழுவதும் தேடிப்பார்த்தும் காணவில்லை. எனவே விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.

3 சிறுவர்களும் சொந்த ஊர் சென்றிருக்கலாமா? அல்லது வேறு எங்காவது சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.source-maalaimalar

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.