கதறி அழும் போட்டியாளர்கள்… பிக்பாஸ் வீட்டில் என்ன தான் நடக்குது..?


பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று மகத் வெளியேற்றப்பட்டவுடன் ஐஸ்வர்யா, யாஷிகாவை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் உள்ளுக்குள் நிம்மதியை தந்திருக்கும். இனிமேல் பிரச்சனைகள் வீட்டில் குறைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதேபோல் இதுநாள் வரை ஆட்டம் போட்ட யாஷிகா, ஐஸ்வர்யா இனி அடக்கி வாசிக்கவும், அவர்களது வெளியேற்றமும் கூடிய விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தங்கள் குடும்பத்தினர்களை நினைத்து ஒருசில வார்த்தைகள் பேசி கதறி அழுவதை போன்ற புரமோ வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இதில் ஒருசிலரின் அழுகை உண்மையாகவும், சிலரது கண்ணீர் நீலிக்கண்ணீராக இருப்பதாகவும் கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது.

குறிப்பாக யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர்களின் கண்ணீரை பார்த்து பார்வையாளர்களுக்கு எந்தவித பரிதாபமும் ஏற்படவில்லை. மாறாக இருவரையும் விரைவில் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணமே ஏற்படுகிறது. இன்றைய எவிக்சன் பட்டியலில் இவர்களது இருவரில் ஒருவர் சிக்கினால் அவர்தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது.-Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!