வாஷிங் மிஷினில் 2 வயது குழந்தையை அடைத்து வைத்த கொடூரம்… நெஞ்சை உருக்கிய சம்பவம்..!


இரண்டு வயது குழந்தை வாஷிங் மிஷினில் அடைத்து வைக்கப்பட்டதால், அந்த குழந்தை கதவை திறக்கும் படி கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலந்தைச் சேர்ந்தவர் ஸனீட்டா டி (21) இவரது கணவர் அங்கிருக்கும் ரடோம் பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 வயதில் கெட்ச்பர் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த குழந்தையை பார்த்துக் கொள்ளும் நபர், வாஷிங் மிஷினுள் அடைத்து வைத்து துன்பப்படுத்தியுள்ளார். இதில் அந்த குழந்தை திறக்கும் படி கூறி, வாஷிங் மிஷினின் கண்ணாடியை கையை வைத்து அழுத்தியது.

இது தொடர்பான காட்சி இணையத்தில் வைரலானதால், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த மெட்டூஸ் என்ற 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.-
Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!