சென்னையில் பெட்ரோலின் விலை அதிகரிப்பு… எவ்வளவு தெரியுமா..?


சென்னையில் இன்று பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.80.50 ஆகவும், டீசல் விலை 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.72.93 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டு வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் 10 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.80.50 ஆகவும், டீசல் விலை 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.72.93 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நாளுக்கு நாள் விலை ஏறி வரும் பெட்ரோல் விலை மறுபடியும் லிட்டர் ஒன்றிற்கு ரூ.80 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதால் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!