என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை… ப்ளுவேல் கேமா? காதல் தோல்வியா? போலீஸ் விசாரணை…!


பால்கரில் என்ஜினீயரிங் மாணவர் விஷம் தின்று தற்கொலை செய்துகொண்டார். இதற்கு காதல் தோல்வி காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தானே மாவட்டம் சகாப்பூர் தாலுகாவில் உள்ள ஆப்டே கிராமத்தை சேர்ந்தவர் அஜய்(வயது18). இவர் பால்கர் மாவட்டம் விக்ரம்காத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். கடந்த சில தினங்களாக மாணவர் அஜய் தன்னுடன் தங்கியிருக்கும் மற்ற மாணவர்களுடன் சரியாக பேசாமல் சோகமாக இருந்து வந் துள்ளார்.

இந்தநிலையில், சம்பவத்தன்று இரவு வயிற்று வலியால் துடித்து உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

டாக்டர்கள் பரிசோதனையில் அவர் விஷம் தின்று இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக தானே மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இளம்பெண் ஒருவரை அஜய் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த பெண் அவரது காதலை ஏற்க மறுத்து இருக்கலாம் என்றும், அதன் காரணமாக அஜய் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர். இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!