காவேரி மருத்துவமனையில் கதறி அழும் தொண்டர்கள்… கோபாலபுரத்தில் திணரும் போலிஸார்..!


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருப்பதாக காவேரி மருத்துவமனை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என காத்திருந்த தொண்டர்கள் இந்த அறிக்கையால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

காவேரி மருத்துவமனைக்கு வெளியே பலர் கதறி அழுந்த நிலையில், எழுந்து வா தலைவா என கண்ணீர் மல்க நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். மருத்துவ அறிக்கை வெளியானதை அடுத்து, பலர் கோபாலபுரம் இல்லத்தின் முன் குவிந்து வருகின்றனர். இதனால், அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!