காவேரி மருத்துவமனையில் இருந்த கனிமொழி காலையில் புறப்பட்டார்..!


இரவு முழுதும் காவேரி மருத்துவமனையில் தங்கியிருந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை கவணித்துக்கொண்ட கனிமொழி இன்று காலை அவரது இல்லத்திற்கு புறப்பட்டார்.

திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக இன்றுடன் 11 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வயது மூப்பு காரணமாக கருணாநிதியின் முக்கிய உடலுறுப்புக்களை செயல்பட வைப்பது சவாலாக இருப்பதாக காவேரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட 6-வது அறிக்கையில் தெரிவித்தது.

இதனால் , திமுக தொண்டர்கள் மத்தியில் ஒருவித பதற்றம் ஏற்பட்டு அவரது உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள மருத்துவனையை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்.

ஆனால், ஸ்டாலின், கனிமொழி உள்பட அனைத்து திமுக எம்.எல்.ஏ.க்களும் நேற்று இரவு 10 மணியளவில், மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் புறப்பட்டுச் சென்றனர்.

இருப்பினும், புறப்பட்டு சென்ற சில மணி நேரங்களிலேயே கனிமொழி மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

இந்ந்நிலையில், நேற்றிரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கியிருந்து கருணாநிதியின் உடல்நிலையை கவணித்துக்கொண்ட கனிமொழி இன்று காலை அவரது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார். கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!