11 மாணவிகளை பாலியல் கொடுமை செய்ததாக எம்பி மகன் மீது புகார்

தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்பி சீனிவாசின் மகன் சஞ்சய் நடத்தி வரும் சாங்கரி நர்சிங் மருத்துவகல்லூரியைச் சேர்ந்த 11 மாணவிகளை பாலியல் கொடுமை செய்ததாக புகார் அளித்து உள்ளதாக தெற்கு நிஸாமாபாத் உதவி போலீஸ் உதவி ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.”நாங்கள் வழக்கு விசாரணை செய்கிறோம். விசாரணை முடிந்தவுடன் மேலதிக விவரங்கள் தெரிய வரும் என் கூறி உள்ளார்.

சஞ்சய் இந்த மாணவிகளை பலமுறை செக்ஸ் டார்ச்சர் செய்து உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் இந்த புகாருடன் தெலுங்கான உள் துறை மந்திரி நைனி நரசிம்ம ரெட்டி என்பவரை அணுகி உள்ளனர்.

இந்திய குற்றவியல் சட்டத்தின் (IPC) 354, 506, 509 மற்றும் 342 ஆகிய பிரிவுகளின் கீழ் சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. -Source:dailythanthi

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.