9-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளை ஆபாசமாக படமெடுத்ததாக உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சைதன்யா பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ரமேஷ் என்ற உடற்பயிற்சி ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.
இங்கு படிக்கும் மாணவிகளிடம் ரமேஷ் தகாத முறையில் நடந்துக் கொள்வதாகவும், கழிவறையில் கேமராவை வைத்து மாணவிகளைப் படம் எடுத்ததாகவும் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
இந்த புகாரையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிந்து ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், காவல் துறையினர் இந்த வழக்கு தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.-Source: tamil.eenaduindia