கணவன் கண் முன்னே 8 மாத கர்ப்பிணியை கூட்டு பலாத்காரம் செய்த 8 பேர் கொண்ட கும்பல்..!


மகாராஷ்டிராவின் சாங்க்லி மாவட்டத்தில் தஸ்வாகன் பகுதியில் கடந்த ஜூலை 31-ம் தேதி 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் 8 நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.

20 வயதான 8 மாத கர்ப்பிணி பெண் அவரது கணவருடன் சேர்ந்து ஒரு வணிக ஆலோசனை கூட்டத்திற்காக தஸ்காவனில் உள்ள துர்ச்சி படாவிற்கு சென்றிருந்தார். அங்கு ஒரு ஓட்டலில் தங்கினார். அப்போது அங்கு உள்ள பணியாளர் மற்றும் அவரது நண்பர்களால் கணவர் தாக்கப்பட்டு அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகுந்த் மானே பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை வேலை வாங்கி தருவதாக துர்ச்சி படாவுக்கு அழைத்து உள்ளார். இதற்காக அவரிடம் முன் பணம் ரூ 20 ஆயிரம் கட்டும்படி கூறி உள்ளார்.

கணவனும் அவரது மனைவியும் அந்த இடத்தை அடைந்தபோது மானேவும் அவரது நண்பர்களும் குழாய்களையும், குச்சிகளையும் கொண்டு அவர்களை தாக்கி உள்ளனர். அவர்களிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பறித்து கொண்டனர். பின்னர் அவர்கள் அந்த நபரை கட்டி, அவரது வாகனம் உள்ளே அடைத்தனர். பின்னர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

பின்னர் அவர்களை அந்த கும்பல் மிரட்டி உள்ளது. நாங்கள் உள்நாட்டில் மிகவும் செல்வாக்கு பெற்றவர்கள், யாரும் கேட்க மாட்டார்கள் என கூறி உள்ளது.

தம்பதியர் தஸ்காவன் போலீஸ் நிலையத்தை அடைந்து பின்னர் புகார் பதிவு செய்தனர். முகுந்த் மானே, சாகர், ஜாவேத் கான், வினோத் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இது குறித்து மகாராஷ்டிரா மாநில பெண்கள் ஆணைய தலைவர் விஜய ராகட்கர் சாங்க்லி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டுக்கு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதி உள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!