கோவையில் பயங்கரம் – அசுர வேகத்தில் வந்த ஆடிகாரால் 6 பேர் மரணம்..!


அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஆட்டோவில் மோதி விபத்துக்குள்ளானதில், கல்லூரி மாணவி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை ஈச்சனாரியில் இருந்து காலை 10 மணி அளவில் அதிவேகமாக ஆடி சொகுசு கார் வந்துள்ளது. கார் கோவை சுந்தராபுரத்தை கடக்கும் போது பெரியார் பேருந்து நிறுத்தம் முன்பு வருகையில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துக்காக காத்து இருந்தவர்கள் மீது மோதியது.

இதில் கல்லூரி மாணவி சுபாசினி,அம்சவேணி,குப்பாத்தாள், நாராயணன், ஸ்ரீரங்க தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தை அடுத்து மாநக காவல் ஆணையர் பெரியய்யா மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சொகுசு காரை ஓட்டி வந்தவர் ஓட்டுனர் ஜெகதீஸ் என்பதும் தனியார் கல்லூரி உரிமையாளர் மதன் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.இதனையடுத்து விபத்து குறித்து போத்தனூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக விபத்து ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகளும் ,விபத்திற்கு பின்னர் எடுக்கப்பட்ட காட்சிகள் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!