சிறந்த அரசியல்வாதி மட்டுமல்லாமல் சிறந்த இலக்கியவாதியான கருணாநிதி மேடைகளில் பேசும்போது அவரது தொடர்பேச்சுக்கள் கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
அந்த அளவுக்கு வாக்கியங்களை வேகமாகவும், அதே நேரத்தில் தெளிவாகவும் பேசி கூட்டத்தில் இருப்பவர்களின் சிந்தனை சிதறவிடாமல் பார்த்துக்கொள்வார்.
மேலும், சிறந்த நகைச்சுவை உணர்வாளரும் கூட.
எதிலும் நகைச்சுவையாக உரையாடும் கருணாநிதி ஒருமுறை சிகிச்சைக்கு சென்றபோது மருத்துவரிடம் அளித்த சுவாரசியமான பதில் இதோ
மருத்துவமனையில் மருத்துவரும், கலைஞரும் பேசிக்கொள்கின்றனர்.
மருத்துவர்: மூச்சை நன்றாக இழுங்கள்.
கலைஞர்: ம்ம்ம்… (மூச்சை இழுக்கிறார்)
மருத்துவர்: மூச்சை விடுங்க
கலைஞர்: (சிரித்துக் கொண்டே கலைஞர் சொன்னார்) மூச்சை விடக்கூடாதுனுதான் டாக்டர் நான் ஹாஸ்பிடலுக்கே வந்திருக்கிறேன்…
மருத்துவர் என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்துப்போனார்.