இப்படிப்பட்ட தவறான பழக்கத்தால் தான் இளம் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறதாம்..!


மாரடைப்பு பெண்களை அதிகமாக நெருங்காது என்ற காலம் ஒன்று இருந்தது. இன்று அனைத்திலும் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக சாதனை படைக்கும் பெண்களுக்கும் ஆண்களுக்கு சமமாக மாரடைப்பு அபாயம் அதிகரித்துள்ளது. பெண்கள் கருவுறும் காலம், மாதவிடாய் காலங்களில் `ஈஸ்டோஜன்’ என்ற ஹார்மோன் சுரக்கிறது.


இதன் காரணமாக ரத்தக்குழாய் சுருங்குவது தவிர்க்கப்படும். ரத்தத்தில் கெட்ட கொழுப்பு குறைத்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும். இதனால் பெண்களுக்கு ரத்த ஓட்டம் சீரடையும். மாரடைப்பு வருவது தவிர்க்கப்படும். இதன் காரணமாக பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் விகிதம் குறைவாக இருந்தது.இன்றைய கால கட்டத்தில் உணவு வகைகள், வாழ்க்கை முறை, பழக்க வழக்க மாற்றம் காரணமாக பெண்களுக்கும் மாரடைப்பு அதிகரித்துள்ளது.


ஆண்களைப் போலவே பெண்களும் மாரடைப்பால் மரணம் அடையும் விகிதம் 50-க்கு 50 என்ற அளவில் அதிகரித்துள்ளது என்று சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.15 முதல் 20 வயதுவரை உள்ள இளம் பெண்களும் தற்போது மாரடைப்பால் உயிர் இழக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. இதை தடுப்பது எப்படி?… இதய நல மருத்துவர் விளக்குகிறார்…


கொழுப்புசத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதும், உடல் உழைப்பு குறைந்துவிட்டதும், சரிவிகித உணவில் அக்கறை காட்டாததும் பெண்களிடம் மாரடைப்பு விகிதம் அதிகரிப்பதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பெண்கள் இதை உணர்ந்து வழக்கை முறையை மாற்றி அமைத்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்

அலுவலகங்களுக்கு செல்லும் பெண்களும், வீட்டில் சமையல் செய்பவர்களும் தங்கள் உடல் உழைப்புக்கு தேவையான சக்தியை தரும் உணவு வகைகளை தேவையான அளவு மட்டுமே சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிடக்கூடாது. காலை உணவாக இட்லி, தோசை, பழ வகைகளை தேவைக்கு ஏற்ப அளவோடு சாப்பிடவேண்டும்.


காலை உணவுசாப்பிடாமல் இருக்கக்கூடாது. மதியம் குறைந்த அளவு சாப்பிடவேண்டும். இரவில்அதைவிட குறைவாக சாப்பிடவேண்டும். இரவில் அதிகமாக சாப்பிடக் கூடாது . கணவன்-மனைவி இருவரும் வேலைக்குப்போகும் வீடுகளில் இரவு உணவை ஓட்டல்களில் வாங்கி சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதை தவிர்க்க வேண்டும்.

தினமும் குறைந்தது 3 லிட்டர் சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். இதை கடைப்பிடித்தால் உடல் எடை அதிகமாவதை தவிர்க்கலாம். பெண்கள் உடல் நிலையை நன்றாக பராமரிக்க மனநிலையை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் அரைமணி நேரமாவது பயிற்சி செய்யவேண்டும்.


நடை பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் இதில் ஏதாவது ஒன்றை வாரத்தில் 5 நாட்களாவது செய்ய வேண்டும். இதுதவிர யோகா, தியானம் போன்றவற்றையும் செய்தால் மனநிலை சீராகும். இதனால் மாரடைப்பு அபாயம் நீங்கும். உடற்பயிற்சி ரத்த ஓட்ட த்தை சீராக்கி மன அழுத்தத்தை குறைக்கும்.
சாப்பாட்டில் கால்பங்கு அரிசி, சப் பாத்திபோன்ற மாவுசத்து, பாதி அளவு காய்கறி, பழங்கள், கால்பங்கு மீன், பருப்பு, முட்டை போன்ற புரதசத்து இருக்கும்படி பார் த்துக் கொள்ள வேண்டும்.

இனிப்பு, வறுத்த உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சோடா, கோக், பெப்சி போன்ற பானங்களையும், காபியையும் குறைத்துக் கொள்வது உடல் நலத்துக்கு நல்லது.இறைச்சி சாப்பிட விரும்புகிறவர்கள் வாரம் ஒருமுறை கோழி இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிடலாம். ஆடு, மாடு, பன்றி இறைச்சியை முடிந்தவரை சா ப்பிடாமல் இருப்பது நல்லது. காரணம் இதில் அதிக கொழுப்பு உள்ளது.


கலப்பு தானியங்கள், விதைகளில் உள்ள பருப்பு வகைகளில் ஊட்டச்சத்துகள் அதிகம், பாதாம், பிஸ்தா, வேர்கடலை, முந்திரி போன்றவற்றை குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.கொழுப்பு இல்லை என்று உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதும் பிரச்சினையை உருவாக்கும். தேவைக்கு அதிகமான உணவு கல்லீரலில் கொழுப்பு சத்தாக மாற்றப்பட்டு உடலின் பல்வேறு பகுதிகளில் சேமிக்கப்படும். இதனால் பெண்களுக்கு வயிறு, இடுப்பு, தொடை பகுதியில் கொழுப்பு சேகரிக்கப்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும்.

இதனால் ரத்தத்தில் கொழுப்பு அதிகமாகி ரத்தக் குழாயில் படிந்து மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகும். சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர் தவிர எந்த உணவையும் தேவைக்கு அதிகமாக சாப்பிட்டாலும், அந்த அளவு கலோரிசக்தி செலவாகும் வரை உடல் உழைப்பு வேண்டும்.


இல்லையென்றால், அதிக உணவு கொழுப்பாக மாற்றப்பட்டு உடல் பருமனை அதிகரிக்கக்செய்து விடும். இதனால் மூட்டுவலி, சர்க்கரைநோய், ஆஸ்துமா போன்ற கோளாறுகள் ஏற்படும். உடல் பருமனால் அதிக வேலை செய்ய முடியாது. உடற்பயிற்சி செய்ய முடியாது.உணவு செரிக்காது. தசை, நரம்பு பலவீனமாகும், நெஞ்செரிச்சல், வாயுதொல்லை, அஜீரணம் உருவாகும்.


மார்பக புற்று நோய், கர்ப்பபை புற்று நோய் உருவாகவும் இது காரணமாகலாம். இதுபோன்ற பிரச்சினைகளால் பெண்கள்தன்னம்பிக்கை இழக்கும் நிலை உருவாகும்.

இவற்றைஆரம்பத்திலேயே தடுக்க உணவு கட்டுப்பாடு, சரிவிகிதஉணவு, மனதை மகிழ்ச்சியாக வைத் துக் கொள்வது, உடற்பயிற்சி ஆகியவை அவசியம். இவற்றை முறையாக கடைப்பிடித்தால் ரத்த ஓட்டம் சீராகும். ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாது. மாரடைப்பு வராது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!