யாழில் பரபரப்பு.. ஒன்றரை வயதுக் குழந்தை காய்ச்சலால் உயிரிழப்பு..!!


காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தது.காமன்ட் லேன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அகமட் ஆஷிக் என்ற ஒன்றரை வயதுக் குழந்தையே உயிரிழந்துள்ளது.

சிறுவனுக்கு கடந்த 24 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மறுநாள் மருந்து எடுத்து வீடு திரும்பியுள்ளனர். எனினும் காய்ச்சல் குறையாததால் கடந்த 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இறப்பு தொடர்பான விசாரணையை ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.source-newuthayan

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!