பல நாள் தண்ணீர், உணவின்றி பட்டினியால் இருந்த 3 குழந்தைகள் மரணம்…!


ஒரே குடும்பத்தை சேர்ந்த பத்து வயதிற்கும் குறைவான குழந்தைகள் பட்டியினால் உயிரிழந்த சோக நிகழ்வு டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லியை சேர்ந்த மானசி, பாரோ, சுகோ ஆகிய மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் மயங்கி நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

அவர்களது உடலை பரிசோதித்த போது, அதிர்ச்சியளிக்கும் உண்மை மருத்துவர்களுக்கு தெரிந்தது. மூன்று பெண் குழந்தைகளின் உடலில் பல நாட்களாக தண்ணீரும், உணவும் இல்லாமல் இருந்தது.

இதை உறுதி செய்த மருத்துவர்கள் மானசி, பாரோ, சுகோ மூவரும் பட்டியினால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். டெல்லியை சேர்ந்த இவர்களது குடும்பம் வாடகை தராததால் வீட்டை விட்டு விரட்டப்பட்டனர்.

குழந்தைகளின் தந்தையான மங்களின் ரிக்‌ஷா சமீபத்தில் திருடுப்போன நிலையில் அவர் வேலை தேடி வேறு ஊருக்கு சென்றுவிட்டார். மேலும் இவர்களது தாயும் மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இதனால் குழந்தைகளை பராமரிக்க வீட்டில் யாருமில்லை. இதன் காரணமாக குழந்தைகள் மூவரும் பல நாட்கள் எதுவும் சாப்பிடமால் பட்டினியால் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!