மூன்று மாதமாக 3 பேரால் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!


மத்திய பிரதேசத்தில் சிறுமியை மூன்று மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த மூவரை போலீசார் கைது செய்துள்ளது.

ம.பி.போபாலை சேர்ந்த 10 வயது சிறுமியை 65 வயது காவலாளி ஒருவர் இனிப்பு வழங்கி தன்னுடைய நண்பன் வீட்டிற்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதோடு, அந்த சிறுமியை அவரின் நண்பர்கள் கோகுல் பன்வால்(45), ஞானேந்தர் (36) ஆகிய இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக அந்த சிறுமியை இதுபோல் சீரழித்து வந்துள்ளனர்.

சில நாட்களாக சிறுமி சோர்வாகவும், சோகமாகவும் இருப்பது கண்டு சிறுமியின் தாய் விசாரித்துள்ளார். அப்போது, தனக்கு நடந்த கொடுமை பற்றி சிறுமி கூறியுள்ளார். இதுகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு உதவி செய்த மேலும் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!