பிரான்ஸ் ரசிகர்களின் உற்சாக கொண்டாட்டத்தால் பறிபோனது இரு உயிர்கள்..!


20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளதால் பிரான்ஸ் ரசிகர்களின் கொண்டாட்டம் வரம்பு மீறியதால் சிலர் திண்டாட்டத்திற்கு ஆளாகினர்.

கடந்த 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றிருந்தது. இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரண்டாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனை முன்னிட்டு ஈபிள் டவரில் 1998 மற்றும் 2018 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒளிபரப்பப்பட்டது. வெற்றிக்கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபடுவார்கள் என்பதால் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு காரணம் கருதி பாரிஸில் குவிக்கப்பட்டனர்.

பாரிஸ் ‘சாம்பஸ்-எலிஸஸ் அவென்யூ – வில் சுமார் 10 ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ரசிகர்கள் சிலர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தங்களது உச்சக்கட்ட சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். ஆனால், இந்த கண்ணீர் புகையால் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் மூச்சு எடுக்க முடியாமல் திணறியுள்ளனர். இதனால் போலீசார் தண்ணீர் வாகனத்தின் உதவியுடன் தண்ணீரை பாய்சியடித்து, ரசிகர்களை காப்பாற்றியுள்ளனர்.

உலக கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் கால்பந்து ரசிகர்கள் மற்றும் 110,000 பாதுகாப்பு ஊழியர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது.

அன்னீனி ஆல்பின் நகரில் 50 வயதான பிரான்சு ரசிகர் ஒருவர் உற்சாகத்தில், கால்வாயில் குதித்த போது அவரது கழுத்து முறிந்து பலியானார். செயின்ட்-பெலிக்ஸ் நகரில், 30 வது வயதில் நபர் உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டத்தின் உற்சாக மிகுதியில் கார் மரத்தில் மோதி உயிர் இழந்தார்.

பல்வேறு இடங்களில் போதையில் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கடைகளை அடித்து நொறுக்கி உள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!