தலைமுடியை நீளமாக வளர செய்ய சீகைக்காயை பயன்படுத்துவது எப்படி…?


சீகைக்காயில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் டி-யுடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகமாக உள்ளது. இவை கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. மேலும் இதில் உள்ள மைக்ரோ-நியூட்ரியன்ட்டுகள் கூந்தல் வளர்ச்சியை தூண்டி, முடியின் இயற்கை அழகைத் தக்க வைக்கும்.

சீகைக்காயின் சிறப்புகள்:

** பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே கூந்தலைப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது சீகைக்காய்.

** சீகைக்காயில் pH-இன் அளவு குறைவாக இருப்பதால், இதனைப் பயன்படுத்தும்போது, அவை தலையில் ஈரப்பசையைத் தக்க வைத்து, கூந்தலை பொலிவோடு வெளிக்காட்டும்.

** சீகைக்காயைக் கொண்டு முடியைப் பராமரித்தால், அவை பொடுகுத் தொல்லையை முற்றிலும் நீக்கிவிடும். அதுமட்டுமின்றி சீகைக்காய் நல்ல வலிமையான மற்றும் அடர்த்தியான முடி வளர உதவும்.

** தலையில் பேன் தொல்லை அல்லது ஏதேனும் தொற்றுகள் இருந்தால், சீகைக்காய் பயன்படுத்தினால் உடனே நீங்கும்.


சரி. தலைமுடியை நீளமாக வளர செய்யும் சீகைக்காயை பயன்படுத்துவது எப்படி?

சீகைக்காயை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்து, முடியை அலச வேண்டும். அளவுக்கு அதிகமாக தேய்க்க வேண்டாம்.

இப்படி சீகைக்காயைக் கொண்டு கூந்தலை அலசி வந்தால், முடி நன்கு பட்டுப்போன்று அழகாக இருக்கும்.

இந்த டிப்ஸையும் டிரை பண்ணுங்க:

தயிருடன் சீகைக்காய் சீகைக்காய் பொடியில் தயிர் சேர்த்து கலந்து, அதனை தலையில் தடவி 15 – 20 நிமிடம் ஊற வைத்து, பின் நன்கு தேய்த்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்தால், முடி நன்கு ஆரோக்கியமாகவும், நீளமாகவும் வளர்வதை உணரலாம்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!