முன்னாள் கணவனுடன் தகராறு – பெத்த மகனை துன்புறுத்தி புகைப்படம் எடுத்த கொடூர தாய்!


சீனாவின் Leiyang நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தாய் ஒருவர் தனது 4 வயது மகனை கட்டிப் போட்டு அடித்து துன்புறுத்தி அழவைத்து எடுத்த புகைப்படத்தை தனது முன்னாள் கணவருக்கு அனுப்பியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாத்தா, பாட்டி உடனடியாக குறித்த இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டுள்ளனர்.

குழந்தையின் தந்தை சீனாவின் Qingyuan பகுதியில் வேலை பார்த்து வருவதாகவும், கடந்த 2016ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

விவாகரத்து பெறப்பட்டதால் குழந்தையை வளர்ப்பதற்கு மாதம் ஒன்றிற்கு 2,000 யுவான் தருவதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கொடுத்து வந்த அவர் இந்த மாதம் 1,000 யுவான் மட்டும் அனுப்பியுள்ளார்.

இதனால் பெரிதும் ஆத்திரமடைந்த குழந்தையின் தாய் உனது மகனை என்ன செய்கிறேன் பார் என்று கூறி இவ்வாறு கட்டிப்போட்டு அடித்து, துன்புறுத்தி அழவைத்து புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!