வீட்டில் இந்த பொருட்களை வைத்திருந்தால் பணப்பிரச்சனை தீர்ந்துவிடுமாம்..!


பணமில்லாமல் இந்த உலகில் எந்தவொரு அணுவும் அசையாது என்பதே தற்போதைய நிதர்சனம்.

அப்படிப்பட்ட பணம் திடீரென சிலர் கைவிட்டு போய் விடும். அப்படி போகாமல் பணம் வீட்டில் தங்கவும், அதிகளவில் சேரவும் சில பொருட்களை வீட்டில் வைத்து கொள்ள வேண்டும்.


நடனமாடும் விநாயகர் சிலை
விநாயக கடவுள் நடனமாடும் தோரணையில் உள்ள சிலைகளை வீட்டின் கதவை பார்க்கும் பகுதியில் வைத்தால் பணவரவு அதிகரிக்கும்.


புல்லாங்குழல்
லட்சுமி கடவுளுக்கு உகந்த இந்த லட்சுமிகடாச்ச பொருள் வீட்டில் இருந்தால் வாஸ்து தோஷங்கள் கழிவதோடு பணவரவும் கூடும்.


தேங்காய்கள்
கடவுளுக்கும், பூஜைகளுக்கும் மிகவும் உகந்ததாக கருதப்படும் தேங்காய்களை அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ வைத்தால் பணப்பிரச்சனை தீரும்.


குபேரன் சிலை
பணத்துக்கான அதிபதியாக இந்த குபேரனை தான் வரலாறுகள் கூறுகிறது. இந்த குபேர சிலை வடக்கு பக்கம் பார்க்கும் படி வைத்தால் சகல வித சொளபாக்கியங்களும் கிட்டும்.


சங்கு
சங்கிலிருந்து வெளிவரும் சத்தமானது தீயசக்தியை அழிக்கிறது. லட்சிமி கடவுள் சங்கில் நிறைந்திருப்பதால் இதை பூஜை அறையில் வைத்தால் வீடு செழிக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!