இதெல்லாம் என்னால் முடியாது… இயக்குனர்களை கதற விட்ட கீர்த்திசுரேஷ்..!


எனக்கு கூச்ச சுபாவம் என்பதால் முத்தக் காட்சியில் மட்டும் நடிக்க முடியாது, என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகையர் திலகம் படம் மூலம் தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கு தன் நடிப்பால் முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்துக்கு பிறகு மீதான மதிப்பும், மார்க்கெட்டும் உச்சத்தில் சென்றுள்ளது. ராஜமவுலியின் அடுத்த படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி பலரின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளார்.

தமிழில் விஜய் ஜோடியாக சர்கார், விக்ரம் ஜோடியாக சாமி ஸ்கொயர், விஷால் ஜோடியாக சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கிறது.

இதுவரையில் கிளாமர், லிப்லாக் காட்சிகளில் காட்சிகள் கீர்த்தி சுரேஷ் நடித்ததில்லை. இனிவரும் படங்களில் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா என்று கீர்த்தியிடம் கேட்டபோது,

“நான் படங்களில் நடிக்க தொடங்கிய காலத்தில் எந்த கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருக்க வேண்டும். முத்தக் காட்சிகளில் நடிக்கவும் தயங்க கூடாது என்று கூறினர். ஆனால் என்னிடம் முத்தக் காட்சியில் நடிக்க கேட்டால் முடியாது என்று மறுத்து விடுவேன்.

இதுவரை நான் நடித்த படங்களில் முத்தக் காட்சி இல்லை. எந்த டைரக்டரும் முத்தக் காட்சியில் நடிக்க நிர்ப்பந்திக்கவில்லை. இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். என்னால் முத்தக் காட்சிகளில் நடிக்க முடியாது.

காரணம் எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. காதல் காட்சிகளில் நடிக்கவும் வெட்கப்படுவேன். கவர்ச்சியாக நடிக்க மறுப்பதால் நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை. தமிழில் நிறைய படங்கள் கைவசம் உள்ளன” என்றார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!