ரகசியமாக நாட்டுக்குள் நுழையும் அகதிகள்..!! ஐரோப்பா எச்சரிக்கை..!!


ரஷ்யாவில் உலக கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகள் களைகட்டியுள்ள நிலையில் அகதிகள் ரசிகர்களாக உள்நுழைவது தெரியவந்துள்ளது.

மொராக்கோ, நைஜீரியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்று வருகின்றனர்.

இவர்கள் ரஷ்யாவில் நடைபெறும் போட்டிகளை பயன்படுத்தி, ரசிகர்களாக உள்நுழைகின்றனர்.

ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயல்வதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐந்து அகதிகள் ரஷ்யாவிலிருந்து பின்லாந்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் ரசிகர்கள் என்ற முறையில் உலகக் கிண்ணப் போட்டிகளை பார்வையிடுவதற்கான டிக்கெட்டுகளும் இருந்துள்ளன.

இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், பின்லாந்து, நோர்வேயை கடக்க முயன்ற 10 ஆப்பிரிக்க மற்றும் ஆசிய அகதிகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.source-.lankasri

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!