வயசு என்னமோ 18 வயதுதான்… முரட்டு குத்து நாயகியின் அதிர்ச்சி பேட்டி..!


சமீபத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்திருந்தவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். இவர், இப்போது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “நான் 16 வயசுல துருவங்கள் பதினாறு படத்தில் நடித்தேன். அப்போது, எனது ஸ்கூலில் பிரபலமாகிவிட்டேன். எனக்கு பெற்றோர் அனைத்தையும் வெளிப்படையாக கூறி வளர்த்தனர். அதனால், எனக்கு 18 வயதுதான் ஆனால் அறிவு 24 வயது பெண் போல உள்ளது. எதையும் யோசித்து தான் பேசுவேன்”.

“இருட்டு அறையில் முரட்டு குத்து, படத்தில் நடித்தேன் என கூறினால் என்னை தவறாக நினைக்கிறார்கள். நான் யாரென்று எனக்கு தெரியும், என் குடும்பத்துக்கு தெரியும். மற்றவர்களுக்கும் என்னை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என நினைத்துதான் பிக்பாஸ் வந்தேன்” என யாஷிகா தெரிவித்துள்ளார்.-Source: thecineflix

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!