சாமியாரும் அவரது சீடர்களும் பலமுறை கற்பழித்தார்கள்! பெண் சீடர் பகீர் வாக்குமூலம்!


என்னை சாமியாரும், அவரது இரு சீடர்களும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர் என சாமியார் மீது அவரது 25 வயது பெண் சீடர் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தெற்கு டெல்லி பதேபூர் பெரி காவல் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது, தாதி மகராஜிடம் பல ஆண்டுகளாக சீடராக உள்ளேன். என்னை பெண் சீடர் ஒருவர் சாமியாரின் அறைக்குள் கட்டாயப்படுத்தி அனுப்பினார். மறுத்தால், சாமியாரிடம் உடலுறவு கொண்டார் என ஆசிரமம் முழுவதும் பொய் பரப்பி விடுவேன் என மிரட்டினார்.

இதனையடுத்து, என்னை சாமியாரும், அவரது இரு சீடர்களும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர். ஆசிரமத்தில் என்னை பல முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். இதையடுத்து நானும் என்னுடைய சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு திரும்பினேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்தில் இருந்து விலகி விட்டேன். இந்த பாதிப்பில் இருந்து விடுப்பட்டு மனவேதனை நீங்கிய பிறகு புகார் அளிக்க முடிவு செய்தேன் என புகாரில் கூறப்பட்டிருந்தது. சாமியாருடன் மேலும் இரு அவரது சீடர்கள் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தேன். அந்த பெண்ணின் பாதிப்பு மனதை உருக்குவதாக உள்ளது. அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது தாதி மகாராஜ் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என கூறினார்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!