இப்படியும் ஒரு அதிஷ்டான நபரா..? 18 ஆண்டுகளுக்கு பின்பும் அடித்தது ஜாக்பாட்..!


அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய அதே எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டுக்கு 14 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 300 டாலர் பரிசாக கிடைத்தது. அதன் பின் தற்போது அவர் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அந்த லாட்டரி டிக்கெட் எண்ணை சரிபார்த்த போது அவருக்கு பரிசு விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அந்த எண் 18 ஆண்டுகளுக்கு முன் பரிசு விழுந்த அதே எண் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு 4 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்தது. அந்த பரிசுத்தொகையில் பாதியை தனது வீட்டிற்கும், மீதி பணத்தை சேமித்து வைக்க போவதாகவும் தெரிவித்தார்.

அதிர்ஷ்டம் ஒரு மனிதரின் வாழ்வில் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் இவருக்கு 18 ஆண்டுகளுக்கு பின் அதே எண்ணில் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!