குழந்தையைக் கொன்று லெஸ்பியன் ஜோடி தற்கொலை – ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்..!


ஓரினச்சேர்க்கை காரணமாக தன் பெண் குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு, பின்னர் லெஸ்பியன் ஜோடியோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத், பாவ்லா பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஆஷா தாகூர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர். இவருக்கு திருமணமாகி மேக்னா (3) என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில், ஆஷா தாகூர், தன்னுடன் பணிபுரியும் பாவ்னா தாகூர்(28) என்ற என்ற இளம்பெண்ணுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விஷயம் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.


இதனால் மனமுடைந்த ஓரினச்சேர்க்கை ஜோடி ஆஷா – பாவ்னா தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர். தங்களின் தற்கொலை எழுதி வைத்துவிட்டு, குழந்தை மற்றும் பாவ்னா தாகூருடன் ஆஷா தாகூர் வீட்டை விட்டு வெளியேறி சபர்மதி நதியில் தனது குழந்தை மேக்னாவை ஆற்றில் வீசி கொன்றுள்ளனர்.

பின்னர், துப்பட்டாவைக் கொண்டு, இருவரும் ஒருசேரக் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

ஓரினச்சேர்க்கையால் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆஷா தாகூர், பாவ்னா தாகூர் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!