வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துக்கு திடீர் மாரடைப்பு..!


தமிழீழ விடுதலையில் தீராத தாகம் கொண்டவரும் விடுதலைப் போராட்டங்களில் முன்னணியில் இருப்பவர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

தற்போது வடமாகாண சபை உறுப்பினராக இருக்கும் எம்.கே. சிவாஜிலிங்கம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று பிற்பகல் யாழ். போதனா மருத்துவமனியின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரின் உடல் நிலை ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டது என்றும், தற்போது அவர் நலமடைந்து வருவதாகவும் மருத்துவமனையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.-Source: tamizhvalai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!