வண்டி ஒட்டிய இளைஞனின் பேன்டில் புகுந்து பாம்பு செய்த அதிர்ச்சி செயல்..!


பேன்டில் பாம்பு ஏறியது கூட தெரியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச்சென்ற வாலிபர் பேண்டை கழற்றி வீசியதால் உயிர் தப்பிய நிகழ்வு கருநாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

வீரேஷ் காதேமணி என்ற இளைஞர் கர்நாடக மாநிலம் நரகுந்த் நகரைச்சேர்ந்த தனது இரு சக்கர வாகனத்தில் சந்தைக்குச் சென்றுள்ளார். அவருடைய வண்டியை மெதுவாக ஓட்டிச் சென்ற வீரேஷ் தனது பேண்டுக்குள் காலில் ஏதோ ஒன்று ஊர்வதை உணர்ந்துள்ளார்.

இருப்பினும் அதனை பெரிதாக கவனிக்காத அவர் தொடர்ந்து பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார். சந்தைக்கு சென்ற அவர் தனது நணபர்களுடன் சுற்றிவிட்டு சந்தையில் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பு போது பேன்டின் கால்பகுதியில் பாம்பின் வால் பகுதியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பைக்கில் இருந்து குதித்து பக்கத்திலிருந்த கடைக்குள் ஓடி தனது பேன்டை உருவி வீசியுள்ளார்.

அப்போது பேன்டினுள் இருந்த 2 அடி நீளம் கொண்ட பழுப்பு நிற பாம்பு வெளியே வந்து விழுந்து ஓடியது. அதை அருகிலிருந்தவர்கள் ஓடி பிடிக்க முற்பட்டபோது , பக்கத்திலிருந்த கழிவுநீர் தொட்டிக்குள் புகுந்து தப்பித்து விட்டது.

சொந்தமாக ஓட்டல் நடத்தி வரும் வீரேஷ் காதேமணி தனது இரு சக்கர வாகனத்தை வழக்கம் போல் நிறுத்தும் இடத்தில் நிறுத்தியுள்ளார். மரத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த பைக் இஞ்சினில் பாம்பு முன்னாடியே இருந்திருக்கலாம் என்றும் பைக்கை ஓட்ட ஆரம்பித்ததும் சூடேறியதால் தனது பேன்டுக்குள் சென்றிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய அவர் தான் பேன்டை கழற்றி வீசியதால் மட்டுமே உயிர் தப்பினேன் என்றும் அது என்ன பாம்பு என பார்க்கவில்லை என்றும் அதிர்ச்சியுடன் கூறினார் வீரேஷ்.-Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!