சுப காரியத்திற்காக நல்ல நாள் பார்க்கும் போது மறக்காம கவனிக்க வேண்டியவை..!


சில முக்கியமான காரியங்களை செய்யும் போது நல்ல நாள் பார்போம். அவ்வாறு நல்லநாள் பார்க்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. அன்றைய தினம் கரிநாளாக இருக்கக்கூடாது.

2. திதியில் அஷ்டமி, நவமி திதிகளை தவிர்க்கவும்.

3. யோகம், மரணயோக நேரமாக இல்லாமல் சித்த, அமிர்த யோகமாக இருக்கட்டும்.

4. ஹோரைகளில் சூரியன், செவ்வாய், சனி ஹோரைகளை தவிர்க்கவும்.

5. ராகுகாலம், எமகண்டம் நேரம் தவிர்க்கவும்.

6. கவுரி பஞ்சாகத்தில் விஷம், ரோகம், சோரம் நேரங்களில் இருக்கக் கூடாது.

7. யாருக்காக நாம் நேரம் தேர்ந்தெடுக்கிறோமோ, அவர்களுக்கு அன்றைய தினம் சந்திராஷ்டமம் தினமாக இருக்கக்கூடாது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!