முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி எறிந்த முன்னாள் காதலி.. அதிர வைத்த காரணம்..!


திருமணம் முடிந்த பிறகு தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் தனது முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி எறிந்தார் முன்னாள் காதலி.

உத்திரபிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒரு பெண்னை காதலித்து வந்தார். இந்த நிலையில் அவரது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்தது, அந்த பெண் தனது கணவருடன் பைசாபாத் இனாயாத் நகரில் வசித்து வந்தார். அங்கு சென்று தனது முன்னாள் காதலியுடன் வாலிபர் சண்டை போட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் அவரது காதலி தனது முன்னாள் காதலனின் நாக்கை துண்டித்து விட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற போது அந்த பெண்ணின் கணவர் வெளியில் சென்று இருந்தார்.

வெட்டு பட்ட நாக்கு கீழே கிடந்து உள்ளது. ஆனால் காதலன் ஓடி விட்டான். இந்த சம்பவம் குறித்து அறிந்த பாதிக்கபட்டவரின் தாயார் முன்னாள் காதலியின் வீட்டுக்கு சென்று சண்டைபோட்டு உள்ளார். பின்னர் வெட்டுபட்ட நாக்கை எடுத்து கொண்டு போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்து உள்ளார்.

முன்னாள் காதலி போலீசில் தனது முன்னாள் காதலன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் அதனால் தான் அவரது நாக்கை வெட்டியதாகவும் கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!