சுவிட்சர்லாந்தில் பெண்மணி ஒருவர் தனது வீட்டில் சிலந்தி இருந்தது குறித்து பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். Chur நகரில் வசித்து வரும் குறித்த பெண்மணியின் வீட்டில் படுக்கையறையில் சிலந்தி வலை பின்னியுள்ளது. இதனால், அச்சம் கொண்ட இவர், எனக்கு வீட்டுக்குள் போக பயமாக இருக்கிறது.
விலங்கினங்கள் வசிக்கும் வீட்டிற்குள் நான் போகமாட்டேன் என்றும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை கேட்டு கோபமடைந்த பொலிசார், வீட்டை சுத்தம் செய்து வாழகற்றுக்கொள்ள என அறிவுரை வழங்கிவிட்டு சென்றுள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!