அதிருப்தி அடைந்த அரசியல்வாதிகள் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இவ்வாறு இரகசிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனியான கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து இந்த உறுப்பினர்கள் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கட்சிகளின் பத்து உறுப்பினர்கள் தற்போது பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் மேலும் சில அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சிகளின் மறுசீரமைப்பு மற்றும் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி அடைந்த உறுப்பினர்களே இவ்வாறு இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் ஓர் கிரமமான அமைப்பாக இந்த உறுப்பினர்கள் இணைந்து செயற்படுவது குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர்.source-tamilwin
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!