9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் – தலைமறைவாக இருந்த முதியவர் தற்கொலை..!


ஆந்திர பிரதேசம் குண்டூரில் 9 வயது சிறுமியை 60 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள், முதியவரின் வீட்டை அடித்து நொறுக்கினார்கள்.

இதுதொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வந்தது. உள்ளூர் மக்கள் சிறுமிக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். “பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் கொடுக்கப்பட்டது, பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலில் காயங்கள் காணப்பட்டு உள்ளது. குற்றவாளி தலைமறைவாக உள்ளான், அவனை தேடும் பணி நடைபெற்று வருகிறது,” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குண்டூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் குற்றவாளி சுப்பையாவை தொடர்ச்சியாக தேடிவந்தார்கள். உள்ளூர் மக்களும் தேடினார்கள். சுப்பையா தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் எனவும் போலீசார் நீர்நிலைகளிலும் சோதனையை மேற்கொண்டார்கள்.

இந்நிலையில் தைடா மற்றும் தெலிகுட்டா கிராமங்களுக்கு இடையே விவசாய நிலத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். தற்கொலைக்கு முன்னதாக நண்பரிடம் தொலைபேசியில் பேசிஉள்ள அவர், அவமானமாக கருதுவதாகவும், இனி உயிருடன் இருக்க விரும்பவில்லை எனவும் கூறிஉள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!