பஞ்சாப் மாநிலத்தில் சிறையிலிருந்து கைதி ஒருவர் பேஸ்புக்கில் லைவ்வாக வீடியோ ஒளிபரப்பிய சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் சிறையில் லகா சிதானா என்ற கைதி அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு பெரிய தாதாவாக அந்த ஊரில் செயல்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் 9 நிமிடம் லைவ் வீடியோ ஒளிபரப்பியுள்ளார். சிறையில் 24 மணி நேரமும் காவலர்கள் இருந்தபோது அவரிடம் எவ்வாறு செல்போன் சென்றது என்று சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!