வீட்டில் அரிசியை இப்படி வைத்திருங்க.. குறைவில்லாமல் செல்வம் பெருகும்..!!


அரிசியில் இப்படி செய்தால் லட்சக்கணக்கில் செல்வம் சேரும். வாழ்க்கையில் வற்றாத செல்வத்தை ஏற்படுத்தக்கூடிய தாந்திரிக முறை இதுவாகும்.இந்த தாந்திரீக முறையை செய்வதால் வாழ்க்கையில் என்றும் வறுமை, ஏழ்மை என்ற நிலையே வராது. கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். வற்றாத செல்வம் சேரும்.

இதனை தேவையானவை அரிசி மற்றும் 1 ரூபாய் நாணயம் மட்டுமே… இந்த தாந்திரீக முறையினை வீட்டில் உள்ள அனைவரும் செய்ய வேண்டும்.


வீட்டில் சமையலறையில் வெள்ளி அல்லது கண்ணாடி பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் அரிசியை நிரப்பி வைக்க வேண்டும்.

அதன் பின்பு குடும்பத் தலைவர் நாணயத்தினை கையில் வைத்து தனது தேவைகளை மனதில் நினைத்து அரிசியில் புதைத்து வைக்க வேண்டும். இதே போல் வீட்டில் உள்ள அனைவரும் செய்ய வேண்டும்.


இவ்வாறு செய்த பாத்திரத்தினை வீட்டில் சமையலறையில் தென்கிழக்கு மூலையில் வைத்தால் வற்றாமல் செல்வம் கொட்டும் என்பது நிச்சயம்…

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!