உயரதிகாரிகளுடன் படுக்கைக்கு வந்தால் மாணவிகளுக்கு பணம் தருவதாக பேசிய பேராசிரியை..!


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக இருப்பவர் நிர்மலா தேவி.

தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க வைக்க முயற்சி செய்வது தொடர்பான தொலைப்பேசி உரையாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த தனியார் கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நிர்மலா தேவி தேர்வுத்தாள் திருத்தும் பணிக்காக காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு சென்று வந்துள்ளார்.

அப்படி சென்ற போது, அங்குள்ள உயர் அதிகாரிகள் கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் 85 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்களுடன், பணமும் தருவதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து நிர்மலா தேவி தொலைப் பேசியில் கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்கும் படியும், இதனால் பணம் போன்றவைகள் கிடைக்கும் என்று ஆசைவார்த்தைகள் எல்லாம் கூறியுள்ளார்.

மாணவிகள் தங்களுக்கு விருப்பமில்லை என்றும், இது பற்றி பேசவேண்டாம் என்றும் மறுப்பு தெரிவித்த பின்னரும் விடாமல் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தும் விதமாக நிர்மலா தேவி சுமார் 19 நிமிடம் பேசியுள்ளார்.

இந்த தொலைப்பேசி உரையாடல் சமூகவலைத்தளங்களில் வைரலானதால் இந்த ஆடியோவைக் கேட்ட பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் அவர் பல்கலைக்கழகத்தில் இருக்கும் எந்த உயர் அதிகாரிகளுக்காக மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறியதாக தெரியவில்லை எனவும், இந்த தகவலை அறிந்தவுடன் கல்லூரி நிர்வாகம் அவரை உடனடியாக இடை நீக்கம் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் நிர்மலா தேவியோ, நான் மாணவிகளிடம் தவறான நோக்கத்துடன் பேசவில்லை, இவை சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.-Source: puthiyathalaimurai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!