பெங்களூரு நித்யானந்தா பீடத்தில் மனைவியும் மகனும்… கதறும் கணவன்…!


நித்யானந்தா பீடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எனது மனைவி மற்றும் மகளை மீட்டுத் தரும்படி தமிழகத்தில் கணவர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை அடுத்துள்ள முனியப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவருக்கு அத்தாயி என்ற மனைவியும் பழனிசாமி(24) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் அத்தாயிக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நித்யானந்தாவின் பீடத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


தொடர் சிகிச்சையால் அவர் உடல் நலம் தெறியதால், பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பீடத்திற்கு அத்தாயி மற்றும் பழனிச் சாமி சென்றுள்ளனர்.

பெங்களூரு சென்ற அவர்கள் திரும்பி வராத காரணத்தினால் தனது மனைவி மற்றும் மகன் நித்யானந்தா பீடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்டுத் தரும்படியும் கூறி ராமசாமி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.-Source: news.lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!